Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச விழா கோலாகலம்: கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2021
10:01

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தைப்பூச திருவிழாவையொட்டி, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். ஜோதிநகர், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி, ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.யாத்திரை புறப்பாடுபொள்ளாச்சி கிராமங்களில் இருந்து, தைப்பூசத்தன்று பக்தர்கள் பழநிக்கு காவடி சுமந்து பாத யாத்திரை புறப்பட்டுச் சென்றனர். ஆறுமுக காவடியை திருவீதியுலாவாக வீடு வீடாக கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த, காவடிகள், வேல், சேவல் ஆகியவற்றை சுமந்தபடி குழுவாக பாதயாத்திரை புறப்பட்டனர். கிணத்துக்கடவுகிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் திருப்பணி நடப்பதால், இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.முத்துமலை முருகன் கோவிலில், தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை, 5:00 மணிக்கு அபிஷேக பூஜையுடன், விழா துவங்கியது. அலங்கார பூஜைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. காலை, 11:00 மணிக்கு முருகனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடத்தப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.முத்துமலை முருகன் கோவில் தைப்பூச விழாவில், உள்ளூர் மக்களுடன், மதுக்கரை, கிணத்துக்கடவு, வடக்கிபாளையம் மற்றும் கேரள மாநில முருக பக்தர்களும் பங்கேற்றனர்.

இதேபோல, நெகமம் பகுதியில், சின்னண்ணன் கோவில், மாயாண்டீஸ்வரர் கோவில், தங்கவேல் அய்யன் கோவில்களில் அபிஷேக, அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தது. ஆனைமலை ஆனைமலை முக்கோணம் சக்தி பாலமுருகன் கோவிலில், நேற்று சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனை நடந்தது. ஆனைமலை ஈஸ்வரன் கோவிலில், வள்ளி, தெய்வநாயகி சமேத சுப்ரமணிய மூர்த்திக்கு திருக்கல்யாணம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோட்டூர் - பழனியூர் மாகாளியம்மன் கோவிலில், முருக பெருமானுக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கோவிலில், 16ம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று காலை, 11:00 மணிக்கு, வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, நல்லகாத்து பாலத்திலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். தாசில்தார் ராஜா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். சுவாமி தரிசனத்தில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, வழிபட்டனர்.உடுமலைஉடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.போடிபட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில், அபிஷேகம், சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள், விளக்கு ஏற்றியும், எலுமிச்சை காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.குட்டை சித்தி புத்தி விநாயகர் கோவிலில், பால் அபிஷேகம் நடந்தது. பாலசுப்ரமணி சுவாமிகள், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில்களில், பக்தர்கள், அரோகரா கோஷம் முழங்கி சுவாமியை வழிபட்டனர்.-- நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar