கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2021 10:01
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தைப்பூச பவுர்ணமி தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தைப்பூச பவுர்ணமி வழிபாடு நடந்தது. உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. உள்பிரகாரம் புறப்பாடு செய்யப்பட்டு மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.பகவத் சங்கல்பம், சாற்றுமுறை சேவை பூஜைகள் செய்து வைக்கப்பட்டது. மகா தீபாரதனை நடந்தது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.