காட்டேரிக்குப்பம்: சந்தைப்புதுக்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவம் நடந்தது.காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தைப்புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.காலை 8:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காவடி மற்றும் செடல் உற்சவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முக்கிய நிகழ்வாக, இரவு 10 மணிக்கு கோவில் குளத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு இடும்பன், கடம்பன் உற்சவம் மற்றும் கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.