குறிஞ்சியாண்டவர் கோயிலில் பாடல் பாடிய நெதர்லாந்துக்காரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2021 11:01
கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த பேட்ரோ 55. முருகன் பக்தி பாடல் பாடினார்.
இவர் 10 ஆண்டுகளாக கொடைக்கானலில் வசிக்கிறார். தற்போது பிரகாசபுரத்தில் வசிக்கும் இவர் தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேவை செய்கிறார்.தமிழ் மீது கொண்ட பற்றால் கற்க தொடங்கினார். ஹிந்து கடவுளான முருகனின் பக்தி பாடல்களை கிடாரை இசைத்தபடி இனிமையாக பாடி வருகிறார். நேற்று தைப்பூச விழாவையொட்டி குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வந்தார். கோயில் வளாகத்தில் ஓம் முருகா, ஓம் நமசிவாயா என்ற பாடலை பாடினார். இதுகுறித்து பேட்ரோ கூறுகையில், முருகன் மீது எனக்கு பக்தி அதிகம். அவரது பாடலை மனம் உருக பாடி வருகிறேன். அம்மன், சிவன் பாடல்களை பாடுவது வழக்கம், என்றார். வெளிநாட்டை சேர்ந்தவரின் பக்தியும், அவரது பாடலும் தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக நம்மூர் பக்தர்கள் தெரிவித்தனர்.