திருப்பூர்:திருப்பூர் கே.வி.ஆர்., நகர் ஈஸ்வரமூர்த்தி லே -அவுட் 4வது வீதியில், ஸ்ரீஅம்சவிநாயகர், ஸ்ரீஅம்சவள்ளி தாயார் உடனமர் ஸ்ரீஅம்சலிங்கேஸ்வரர்கோவில் உள்ளது. இங்கு, தைப்பூச சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.யாகசாலை மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகர் சன்னதியில் அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நலன் வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது.