பதிவு செய்த நாள்
30
ஜன
2021
11:01
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 33 லட்சத்து, 63 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள, ஆறு உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும். அந்த வகையில் நேற்று காலை உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 33 லட்சத்து, 63 ஆயிரத்து, 834 ரூபாய், 38 கிராம் தங்கம், 22 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று வைக்கப்பட்ட உண்டியல், கடந்த, 27ல் திறக்கப்பட்டது. அதில், 23 ஆயிரத்து, 943 ரூபாய் பெறப்பட்டது.