Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் கட்ட நிதி சேகரிப்பு ... மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் மேட்டுக்குப்பத்தில் திருஅறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

31 ஜன
2021
10:01

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், வடநெற்குணம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - மரக்காணம் சாலையில், ஆலங்குப்பத்திற்கு அருகே உள்ளது வடநெற்குணம். இங்குள்ள மாசியப்பன் கோவிலில், பழமையான புடைப்பு சிற்பமாக அய்யனார் உள்ளதை, அன்னம்பாக்கம் தனபால் கண்டுபிடித்து, உ.வே.சா., நுாலக காப்பாட்சியர் கோ.உத்திராடம் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் பூபாலன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஆய்வு செய்தனர்.

குண்டலம்: இதுகுறித்து, கோ.உத்திராடம் கூறியதாவது:அய்யனார் புடைப்பு சிற்பம், 4 அடி உயரமுள்ள பலகை கல்லில், வலதுகால் கோலத்தில் பீடத்தின் மேல் குத்திட்டும், இடது கால் மடித்தும் அமர்ந்த நிலையிலும், சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அய்யனாரின் தலையில் சடாமுடி தரித்து, தோள்களில் படுமளவுக்கு நீண்ட காதுகளில் குண்டலம் அணிந்து, வலது கையில் செண்டைப் பிடித்தும், இடது கையை தொடை மீது வைத்தும் அமர்ந்து உள்ளார்.

கழுத்தில் அணிகலன், மார்பில் முப்புரிநுால், மேல் கையில் தோள்வளை, மணிக்கட்டில் காப்பு, இடையில் இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அய்யனாருக்கு அழகு செய்கின்றன. புடைப்பு சிற்பம்அய்யனாரின் தலையை ஒட்டி சாமரமும், குடையும் காட்டப்பட்டு உள்ளது. இடதுபுரம் அழகிய குதிரை, பீடத்தின் அருகில் நாய்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தோற்றத்தை வைத்து, இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தில் வடிக்கப்பட்ட, புடைப்பு சிற்பமாக இருக்க வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்தை சேர்ந்த அய்யனார் சிற்பங்கள், விழுப்புரத்தின் ஆலகிராமம், கிளியனுார், நெற்குணம், செண்டியம்பாக்கம், தென்பேர், பிடாகம், கொண்டங்கி, ஒரு கோடி, சித்தேரிக்கரை ஆகிய ஊர்களில் உள்ளன. அதேபோல, சோழர் காலத்தை சேர்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்களும் இவ்வூரில் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar