வடலுார்:வடலுார் அடுத்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடந்தது.கடலுார் மாவட்டம் வடலுார் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா ஜன., 28ம் தேதி நடந்தது. இதில் ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
வள்ளலார் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடந்தது. வடலுார் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் நேற்று காலை 6:00 மணியளவில் பல்லக்கில் மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டது. வள்ளலார் சித்தி அடைந்த திருஅறை மதியம் 12:30 மணிக்கு திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மாலை 6:00 மணி வரை திருஅறை தரிசனம் செய்தனர்.