பதிவு செய்த நாள்
31
ஜன
2021
10:01
வடவள்ளி: வடவள்ளியில், ராதா கிருஷ்ணா மண்டலி சார்பில், ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.
வடவள்ளி ராதாகிருஷ்ண மண்டலி சார்பில், ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம், வைதிக ஸமாஜத்தில், நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை, 7:30 மணிக்கு, உஞ்சவ்ருத்தி பஜனையும், 9:30 மணிக்கு, ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம், திவ்ய நாம சங்கீர்த்தனம், முத்து குத்துதல் உள்ளிட்டவைகள், ஸ்ரீ ஏக்நாத் பஜன் மண்டலி, ஸ்ரீ விட்டல் சத்யநாராயண பாகவதர், போத்தனூர் ஸ்ரீ கௌதம் பாகவதர், ஸ்ரீ பாலு பாகவதர் குழுவினர் சார்பில் நடத்தப்பட்டது. 11:30 மணிக்கு, திருமாங்கல்யதாரணம், நலங்கு வைத்தல் வெகு சிறப்பாக நடந்தது. பகல், 1:30 மணிக்கு, ஆஞ்சநேய உற்சவம்; 2:00 மணிக்கு, மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன், ராதா கல்யாண மஹோத்ஸவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.