பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மகா கும்பாபிஷேக விழா திருப்பள்ளியெழுச்சி, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஐந்து வேள்விகள், சிறப்பு பூஜை, கும்ப கலசங்கள் நிர்மாணித்தல் ஆகியன நடந்தன. ஆறாம் கால வேள்வியொட்டி நாடி சந்தானம், கண் திறத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தீர்த்தங்கள், கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், காலை, 10.00 மணிக்கு பட்டாச்சாரியார்கள், கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பெருமாள் திருக்கல்யாணம், அன்னதானமும் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.