உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. மாதம்தோறும் சுவாமிகளுக்கு பூரம் நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை நடக்கிறது. தை மாதம், பூரம் நட்சத்திர நாளையொட்டி, நேற்று, ஆண்டாள் சுவாமிகளுக்கு, சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சிவப்பு நிற பட்டுடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.