சோழவந்தான் : சோழவந்தான் படித்துறை வரதவிநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. மக்கள் ஆரோக்கியமாக வாழ சிறப்பு அபிஷேக, ஆராதனையை பட்டர் கார்த்திக் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.