பதிவு செய்த நாள்
01
பிப்
2021
11:02
உளுந்தூபேட்டை: உளுந்தூர்பேட்டை சின்னசாமி நகர் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் சின்னசாமி நகரில்அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று(1ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 9 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, யாகசாலை அலங்காரம் நடந்தது. மாலை 4 மணி அளவில் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், முதல் கால பூஜை தீபாராதனை வழிபடும் நடந்தது. இன்று(1ம் தேதி) காலை 6 மணியளவில் 2ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், காலை 9 மணியளவில் யாத்ராதானம், கடம் புறப்பாடும், காலை 10 மணியளவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும், காலை 10.15 மணியளவில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை வழிபாடு நடக்கிறது.