பதிவு செய்த நாள்
01
பிப்
2021
11:02
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளத்தில், நேற்று, பக்தர்கள் குழுவினர், உழவார பணி மேற்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சேர்ந்தது சங்கு தீர்த்த குளம். தைப்பூசத்தன்று இக்குளத்தில், தெப்பல் திருவிழா நடந்தது.விழா முன்னதாக, குளத்தில் மண்டிக் கிடந்த புல்செடிகள், கோவில் சார்பில் அகற்றப்பட்டு, படிக்கட்டுகளில் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன.விழா முடிந்த நிலையில் படிக்கட்டுகளில் உள்ள புல்செடிகளை அகற்றும் பணி மீண்டும் துவங்கியது. வழக்கமாக, விடுமுறை நாட்களில் பக்தர்கள் குழுவினர் மாவட்டத்தில் உள்ள கோவில் மற்றும் தெப்பக் குளங்களில் உழவாரப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, நேற்று, திருவள்ளுர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குழுவினர், சங்கு தீர்த்த குளத்தின் படிக்கட்டுகளில் குவிக்கப்பட்டிருந்த புல்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.