பதிவு செய்த நாள்
01
பிப்
2021
11:02
வழிகாட்டுகிறார் புத்தர்
* மனிதன் தன்னை அறிந்தால் யாருக்கும் தலை வணங்காமல் வாழலாம்.
* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.
* மனதிலுள்ள பிரச்னைகளை அறியவும், சரி செய்யவும் தியானம் ஒன்றே வழி.
* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சிக்கு மயங்காதவனே அறிஞன்.
* ஆசையை ஒழியும் போது தாமரை இலை தண்ணீர் போல துன்பம் நம்மை தீண்டாது.
* எளிமை, கண்ணியம் இரண்டும் தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.
* தடைகள் இல்லாவிட்டால் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.
* உடல், நாக்கு, மனதை அடக்கியாள்வதே உண்மையான அடக்கம்.
* ஒருவனுக்கு வரும் நன்மை, தீமைக்கு அவனவன் செயல்களே காரணம்.
* அன்பே உலகின் மகாசக்தி. இந்த உண்மை புரிந்தால் வாழ்வு மேம்படும்.
* அடக்கம் இன்றி நுாறாண்டு வாழ்வதை விட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
* வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதி தருவதாக இருக்க வேண்டும்.
* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.
* மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையில் பரவும். நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.