பதிவு செய்த நாள்
01
பிப்
2021
11:02
அறிவுறுத்துகிறார் சிவானந்தர்
* எதற்கும் உணர்ச்சிவசப்படாதீர்கள். மனதை உங்களின் வசமாக்குங்கள்.
* நற்குணம் கொண்டவர் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும்.
* சத்தியவழி தவறாத நல்லவர் வாழ்வில் அமைதி தவழும்.
* மனதில் கட்டுப்பாடு இருந்தால் லட்சியத்தை விரைவாக அடையலாம்.
* ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்யுங்கள்.
* கருணையே உயர்வான குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான ஆற்றல்.
* மன அமைதி இழக்காத மனிதர்களை தோல்வி நாடுவதில்லை.
* பணிவும் எளிமையும் இருந்தால் தெய்வம் உங்களைத் தேடி வரும்.
* பிறவிக்கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள். ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள்.
* எந்த நிலையில் இருந்தாலும் கடவுளை குறை சொல்லாதீர்கள்.
* உங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என அறிந்தவர் கடவுள் ஒருவரே.
* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டு விட்டால் அன்பை உணர முடியும்.
* பக்தனின் மன பக்குவத்திற்கு ஏற்ப கடவுளின் அருள் கிடைக்கும்.
* இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை ஆகியவை ஆன்மிகவாழ்வின் ஆதாரங்கள்.