சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வயலில் விளைந்த நெல்லை அறுக்கிறீர்கள். கட்டு கட்டாக கட்டி களத்து மேட்டுக்கு வந்தாயிற்று. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கதிர் அடிக்கிறீர்கள். நெல்லைப் பிரித்து மூடைகளில் கட்டியாயிற்று. பாடுபட்டு உழைத்த தொழிலாளி கூலிக்காக நிற்கிறான். கொடுத்தாயிற்று. ஆங்காங்கே நெல்மணிகள் சிதறிக் கிடக்கின்றன. அதை சேர்த்தால் ஒரு குவிண்டால் சேரும். அதை வண்டியில் ஏற்றி விடாதீர்கள். உங்களுக்காக உழைத்த தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுங்கள். மிச்சம் மீதியையும் விட்டுச் செல்லுங்கள். பறவைகள் கொறித்துச் செல்லட்டும். கூலி கொடுப்பதை விட, மனம் விரும்பி தரும் சன்மானத்தை தொழிலாளி பெருமையாகக் கருதுவான். அடுத்த பருவத்தில் உழைப்பை இரட்டிப்பாக்குவான். இதனால் நீயும் வளர்வாய். உன்னால் மற்றவர்களும் வளர்வார்கள் என்கிறது பைபிள்.