பதிவு செய்த நாள்
02
பிப்
2021
10:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, 22 தீர்த்தங்களில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் புனித நீராடினர்.
ஊரடங்கால், மார்ச் 24 முதல், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசன அனுமதி நிறுத்தப்பட்டது. செப்., 1 முதல் தளர்வு அறிவிக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோவிலில் உள்ள, 22 தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களை அனுமதிக்கவில்லை.நேற்று பிப்., 1 முதல் ஊரடங்கு தளர்வில், ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களை திறக்க, முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, இன்று முதல், 22 தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.தினமும் காலை, 5:30 முதல் மாலை, 6:00 மணி வரை புனித நீராடலாம். கட்டணம், 25 ரூபாய் என கோவில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.