Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆதீனத்தில் கீதை உபதேசிக்கும் ... பழநியில் திருக்கல்யாணம் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகும்பேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாணத்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2012
10:06

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலமாக நடந்தது. சோழவளநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் 26வது திருத்தலமாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவராலும் பாடப்பெற்ற தலமாக கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவில் திகழ்கிறது. காசி, திருவண்ணாமலை, திருத்தில்லை முதலான சிவத்தல வரிசையில் 11வது திருத்தலமாக திகழ்கின்றது. ஆன்மாக்கள் உய்வு பெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்குக் காரணமாகிய ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்துத் தந்து அதனையே சிவலிங்க மூர்த்தமாக அமைத்து தம்மை தாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது. 72ஆயிரம் கோடி மந்திர துதிகளுக்கு அதிபதியாகி அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதியானவர் இங்கு மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலம் ஆகும். இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில் திருக்கல்யாணத்திருவிழா மே 30ம்தேதி இரவு 7மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அளித்தார். 8 மணிக்கு சிவபெருமான் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 9 மணிக்கு நிச்சயதாம்பூலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு மேல் 12மணிக்குள் ஆதிகும்பேசுவரருக்கும், மங்களாம்பிக்கைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரவு 7மணிக்கு வெளிப்பிரகார உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று(1ம்தேதி) இரவு திருமண மறைச்சடங்கு நலுங்கு, ஊஞ்சல், இரவு பெரிய பிரகாரத்தில் உலாப்போந்து காட்சியளித்தல் நடந்தது. இன்று(2ம்தேதி) நாளை 3ம்தேதி இதே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் 4ம்தேதி திருக்கோவிலிலிருந்து சுவாமி அம்பாளுடன் புறப்பட்டு பகல் 12மணிக்கு மேல் 1.30மணிக்கு சங்கரமடத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு திருக்கோவிலுக்கு திரும்ப எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 5ம்தேதி மகாசுத்தாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி கமிஷனர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar