புதுச்சேரி - வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 108 விளக்கு பூஜை நடந்தது.புதுச்சேரி காந்தி வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆர்ய வைசிய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், தை மாத 3வது வெள்ளி கிழமையொட்டி, 108 குத்து விளக்கு பூஜை நடந்தது.பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வெள்ளி காசு, துணி, பூஜைக்கு தேவையான குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யுவ ஜன சேவா சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார்.கவுரவ தலைவர் ரமேஷ், செயலாளர் தினேஷ், பொருளாளர் செந்தில் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். வரும் 13ம் தேதி, 33ம் ஆண்டு அக்னி பிரவேசம், பால் குட ஊர்வலம், புஷ்ப யாகம் நடக்கிறது.