திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை, தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு விநாயகர், அய்யனார், பிடாரியம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் ஆலய மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. இவ்விழாவில் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.