உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2021 04:02
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் பழமையான வராகி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பங்களில் புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால் அபிஷேகம் நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு காலை 10 மணி அளவில் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வெள்ளிக் கவச சர்வ அலங்காரத்தில் காணப்பட்டார். மேலக்கொடுமலூர் ஸ்ரீதர், ரமேஷ் குருக்கள், மங்கள பட்டர், சுப்பையா ஆகியோர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.