பதிவு செய்த நாள்
02
பிப்
2021
05:02
புதுச்சேரி - முருங்கப்பாக்கம் துளுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிவஞானபாலய சுவாமி தலைமையில் நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் துளுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 28 ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
பின், 29ம் தேதி காலை 9 மணிக்கு கோபூஜை, தனபூஜை, லஷ்மி ஹோமம், புதிய விக்ரகம் கரிகோலம்,மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, நவக்கிரக ஹோமம் நடந்தது.30ம் தேதி காலை 8:30 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, 31ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், விக்ரகம் பிரதிஷ்டை செய்தல் நடந்தது. மாலை 5 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, மந்த்ர உபசாரம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், நாடி சந்தானம், காலை 10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கோபுரம், மூலவர், பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது.இதில், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயமூர்த்தி, பாஸ்கர், முன்னாள் சபாநாயகர் சபாபதி, இந்து சமய அறநிலையத்துறை செயலர் மகேஷ், அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன், செயலாளர் கணபதி, கிருஷ்ணன் உட்படபலர் பங்கேற்றனர்.