உடுமலை : உடுமலை தென்னைமரத்து வீதி, ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவில், மகா கும்பாபிஷேக ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு நிர்வாகக்குழு தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்சந்திரன், பொருளாளர் காமாட்சி ஜெயராமன், துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கோவில் திருப்பணிகள், நிதி திரட்டுதல் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.