ரெகுநாதபுரம் : முத்துப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயத்தில் ஜனவரி 24 அன்று மாலை கொடியேற்றத்துடன்விழா துவங்கியது.நவ நாட்களில் ஒவ்வொரு தலைப்பிலும் மறையுரை வாசிப்பு, போதனை நடந்தது.நேற்று இரவு 7:00 மணிக்கு சிறப்பு திருப்பலியும் ஜெபமும், மன்றாடுதலும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு சர்ச்சில்இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காணிக்கை அன்னையின் சொரூப தேர் பவனி நடந்தது.ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு பேரவை அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் குழுவினர் செய்திருந்தனர்.