பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தில் கனகவல்லி தாயார் சமேத பூமிநீளா சமேத ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோவில், ஸ்ரீரக்ஷாஜாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 3ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு சுதர்சன ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று 2ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.