Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்பாவன அமைதி குழுவிற்கு ... சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருட சேவை

பதிவு செய்த நாள்

05 பிப்
2021
12:02

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நடந்தது.

சென்னை, திருவல்லிக்கேணியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, சித்திரை மாத பிரம்மோற்சம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய பிரம்மோற்சம், 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சேஷ வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடந்தது.விழாவின் முக்கிய நாளான இன்று காலை, 5:30 மணிக்கு கருடசேவை உற்சவம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, நண்பகல், 12:00 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு, 7:30 மணிக்கு ஹம்ச வாகனப் புறப்பாடும் நடக்கிறது.நாளை, காலை சூரிய பிரபையும், இரவு, சந்திர பிரபையும் நடக்கிறது. 7ம் தேதி காலை, 5:30 மணிக்கு, பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, 9ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை, 4:00 மணி முதல், 4:40க்குள் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார்.அன்று காலை, 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 6:15 மணிக்கு பல்லக்கில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலம், இரவு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. 11ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 12ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.வரும், 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar