* பசி என வந்தவருக்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பு. * அச்சத்தை அகற்றாவிட்டால் அடிமையாக வாழ வேண்டியிருக்கும். * கொடுக்கின்ற மனம் இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்காதீர். * கோபத்தால் நொடிப் பொழுதில் நண்பர்களும் பகையாவர். * தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும். * பேராசை கொண்டவனுக்கு உலகையே கொடுத்தாலும் திருப்தி ஏற்படாது. * பொய் மனிதன் பழிக்கு ஆளாக்கும். உண்மையோ புகழுடன் வாழ வைக்கும். * விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் எளிதில் உண்டாகாது. * தன்னம்பிக்கை இல்லாதவனால் புதிய முயற்சியில் ஈடுபட முடியாது. * போதும் என்ற மனம் இருந்தால் பிறர் நலனில் அக்கறை உண்டாகும். * கூட்டு முயற்சியால் கிடைத்ததை கூட்டாளிக்கும் பகிர்ந்து கொடுங்கள். * தேவைக்கு மேல் பணம் இருந்தால் தேவையுள்ளவனுக்கு கொடுங்கள். * மனிதனின் விருப்பம் போல வாழ்நாளை நீடிக்க முடியாது. * குறுகிய எல்லை கொண்ட வாழ்வில் முடிந்த நல்லதைச் செய்யுங்கள்.