பதிவு செய்த நாள்
11
பிப்
2021
01:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தை மாத திருவோணம் நட்சத்திர சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. விழாவையொட்டி, பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், பச்சை அரிசி மாவு, உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் மற்றும் ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.