பதிவு செய்த நாள்
11
பிப்
2021
02:02
வடவள்ளி: கல்வீரம்பாளையத்தில், பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்படத்தை விழா நடந்தது.
வடவள்ளி பஞ்ச சித்ரா ஓவிய அகாடமியின் நிறுவனர் பருதிஞானம், மருதமலை பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்படத்தை வரைந்திருந்தார். மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு உருவ படம் திறப்பு விழா, கல்வீரம்பாளையத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், உபநிச ஆனந்த மந்தீர் ஆத்மநம்பி, ஜுன்ன அக்காடா உஜ்ஜைன் பிரியாவ்ரத்பூரி வாசுதேவ், ஸ்ரீ போகர் பழனி ஆதீனம் ஸ்ரீ சிவானந்த புலிப்பாணி தண்டாயுதபாணி சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருதமலை பாம்பாட்டி சித்தரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தனர். இதில், பாம்பாட்டி சித்தரின் உருவப் படத்தை வரைந்த, பருதிஞானம், யூகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பழனி சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் பேசுகையில்,"ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை காக்க, சிறுவயது முதலே குழந்தைகளுக்கு இதுகுறித்து போதிக்க வேண்டும். எனவே, ஆன்மீகத்தை, பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்றார்.