பதிவு செய்த நாள்
11
பிப்
2021
03:02
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள, திம்மசந்திரம் சப்ளம்மாதேவி கோவில், மாடுகள் திருவிழா துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டுகள் பழமையான திம்மசந்திரம் சப்ளம்மாதேவி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாடுகள் திருவிழா நடப்பது வழக்கம். கடந்தாண்டு, நுாற்றுக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, பல கோடி ரூபாய் வரை விற்பனையாகின. இந்த ஆண்டுக்கான, மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது. சம்ளம்மாதேவிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 14ல் இரவு, 9:00 மணிக்கு, 40க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் நடக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து, அதிகளவு வியாபாரிகள் வருவார்கள் என்பதால், இந்த ஆண்டும் மாடுகள் விற்பனை நல்லமுறையில் நடக்க வாய்ப்புள்ளதாக, விழா குழுவினர் தெரிவித்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.