ஸ்ரீவில்லிபுத்துார் :
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகள்
தரிசனம் செய்தார். அவருக்கு ஆடிப்பூர பந்தலில் கோயில் செயல் அலுவலர்
இளங்கோவன், பட்டர்கள் வரவேற்பு அளித்தனர். வடபத்ரசாயி, ஆண்டாள் சன்னதிகளில்
தரிசனம் செய்தார். பின் மணவாளமாமுனிகள் சன்னதிக்கு வந்த பெரிய ஜீயரை,
சடகோப ராமானுஜ ஜீயர் வரவேற்றார். பக்தர்கள் ஆசி பெற்றனர்.