திண்டிவனம் - திண்டிவனம் காமாட்சியம்மன் கோவிலில், திருமணத்தடை நீங்க வேண்டி பெண்கள் பங்கேற்றதிருவிளக்கு பூஜைநடந்தது.இதில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு அம்மன் பாதத்தில் வைத்த மங்கள பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.பூஜை ஏற்பாடுகளை, ஆலய தலைவர் குப்புசாமி தலைமையில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜனார்த்தனன், பச்சையப்பன்உள்ளிட்டோர் செய்திருந்தனர்.