பதிவு செய்த நாள்
11
பிப்
2021
07:02
பழநி:பழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், 11 மாதங்களுக்குப் பின் இன்று திறக்கப்பட உள்ளன.திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், பல விடுதிகள் உள்ளன. மார்ச் 19 முதல் முதல், கொரோனா பரவலை தடுக்க விடுதிகள் மூடப்பட்டன. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இன்று காலை, 9:30 மணிக்கு மேல், பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடுதிகள் திறக்கப்படுகின்றன.இதேபோல, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 11 மாதங்களுக்கு பின், தை அமாவாசையான இன்று, பக்தர்கள் தரிசனம் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதேபோல, திருச்சி, ஸ்ரீரங்கம், யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில், நேற்று முதல் மீண்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.