வள்ளலார் ஜோதியானவர்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2021 07:02
சென்னை: வள்ளலார் காலமானவர் அல்ல; ஜோதியானவர் என, வடலுார் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர், பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: வள்ளலார் என போற்றப்படும் ராமலிங்க அடிகளார், 1874 ஜன., 30ல், காலமானார் என்ற தகவல் சரியல்ல; இந்த தகவல், வள்ளலார் அடியார்கள், அபிமானிகளை புண்பட வைத்து விட்டது. வள்ளலார் காலமானவர் அல்ல; ஜோதியானவர். அவர் ஜோதியானவர் என்பதை, அரசிதழ் செய்தியும் உறுதி செய்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.