பதிவு செய்த நாள்
11
பிப்
2021
07:02
ஈரோடு: சென்னை, அம்பத்தூர், ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரஹம்ச, ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள், இந்தியா முழுவதும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வாராஹி மற்றும் புவனேஸ்வரி பாலா அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக, பவானி, கூடுதுறை ஸ்ரீஐயப்ப சேவா திருமண மண்டபம் அருகே, காவிரி ஆற்றுப்படுகையில் உலக நன்மை, கொரோனா தொற்று முற்றிலும் நீங்க, நீர்நிலைகள் மாசுபாடின்றி பெருக, விவசாயம் செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டி, ஸ்ரீபாலா அம்பாளுக்கும், ஸ்ரீவாராஹிக்கும், பரஹம்ச ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள், 64 வித அபிஷேகம், புஷ்பாஞ்சலி வழிபாடு செய்தார். இதில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணராஜ், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் இளங்கோ, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ரமணன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.