பதிவு செய்த நாள்
12
பிப்
2021
01:02
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மார்ச் 5ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து மார்ச் 20ல் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
பூச்சொரிதல் விழாவையொட்டி, மார்ச் 5 மாலை 6:00 மணிக்கு நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்துபூக்களை தட்டுகளில் பரப்பி அலங்கரித்து அதை இரவு 10:00 மணிக்கு கோயிலில் ஊர்வலமாக சென்று சேர்ப்பார்கள். அன்று இரவு விடிய, விடிய அம்மனுக்கு பூ அலங்காரம்செய்யப்பட்டு, மறுநாள் அதிகாலை தீபாராதனைக்குப் பின், பூக்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 19 அன்று பங்குனி பால்குட விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கி, மறுநாள்(மார்ச் 20) காலை கோயில் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றப்படும்.விழா நாட்களில் தினமும் அம்மன் பூதகி, சிம்மம், கிளி, யானை, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதிவலம் வருவார்.முக்கிய நிகழ்வாக வண்டிமாகாளி உற்ஸவம்,மார்ச் 28 அன்று இரவு 8:00 மணிக்கு மின்சாரதீப தேரோட்டம், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குதல் நடக்கிறது.மார்ச் 30ல் காலை 5:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் பால்குடம், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.