தை அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2021 05:02
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில், வீரக்குமாரசாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வெள்ளகோவில் செல்லாண்டி அம்மன் கோவில், வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், யானை மேல் அழகியம்மன் கோவில், ஏரி மொண்டிக் கருப்பண்ணசாமி கோவில், முருக்கங்காட்டு வலசு தம்பிகலையசுவாமி கோவில், உட்பட அனைத்துக் கோவில்களிலும் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆண்டுதோறும் குலதெய்வக் கோவில்களில் முதியோர்கள் தொன்றுதொட்டு வழிபடும் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை சிறப்பாக நடைபெறும். குலத்தவர் கோவில் அனைத்தும் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக மஹா தீபாராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது.