பதிவு செய்த நாள்
12
பிப்
2021
05:02
பென்னாகரம்: தை அமாவாசையையொட்டி, ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோரத்தில், நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால், குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். நேற்று தை அமாவாசை என்பதால், ஒகேனக்கல் காவிரியாற்றில ஏராளமானோர், புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். பூஜை செய்த பொருட்களை, ஆற்றிலே விட்டனர். பின்னர் அவர்கள், ஆற்றில் நீராடி அங்குள்ள காவிரியம்மனை வழிபட்டனர்.
* அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர துவங்கியதால், கூட்டம் அலைமோதியது. பின், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடிவிட்டு, சுவாமியை வழிபட்டனர். முன்னதாக, தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது.