பழநி : பழநி முருகன் கோயிலின் உப கோயிலான கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று (பிப்.12) முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் துவங்குகிறது.
பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி இன்று இரவு 7:00 மணிக்கு மேல் முகூர்த்தக்கால் ஊன்றப்படுகிறது. பிப்.16ல் இரவு 7:30க்கு மேல் திருக்கம்பம் சாட்டுதல், பிப்.23ல் மாலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெறும். பிப்.24ல் காலை 9:00 மணிக்கு கிழக்குகிரி வீதி மற்றும் குமாரசத்திரம் அழகுநாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணம், மார்ச் 2ல் இரவு 7:00மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச் 3 ல் பகல் 3:00 மணிக்கு மேல் திருத்தேரில் எழுந்தருளி, மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வருவார்.