மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் தை அமாவாசை வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த மோழியனுார் வக்கர காளியம்மன் கோவிலில் நேற்று தை அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு காலை 8:00 மணிக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து. மாலை 6:00 மணி கூட்டு வழிபாடு செய்தனர். இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இது போன்று தென்பசியார் பெரியபாளையத்தம்மனுக்கும், கூட்டேரிப்பட்டு, கொல்லியங்குணம், காளியம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.