கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த, சந்தூர் கெங்காவரம் கிராமத்தில், நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, வால்பாறை மாரியம்மனுக்கு, 17ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. கோவில் முன், பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பெண்கள் பால்குடம், மா விளக்கு எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேள, தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் அம்மன் வீதி உலா வந்தது. பின்னர் கோவிலை அடைந்து, அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.