இருக்கன்குடியில் குவியும் பக்தர்கள்; இன்று தை வெள்ளியையொட்டி கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2021 05:02
சாத்துார் : ஏகாம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ராஜபாளையம், சேத்துார், தென்காசி மாவட்டம் சிவகிரி, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி மற்றும் தை கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். தொற்று காரணமாக 2020ல் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தளர்வால் கோயில்களில் வழக்கம்போல் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இருக்கங்குடி மாரியம்மன் கோயிலில் இன்று தை கடைசி வெள்ளி என்பதால் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக, கார் ,வேன்,பஸ்களில் வந்து குவிந்து வருகின்றனர். ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு பூசாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.