அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மன்றத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது.அவலுார்பேட்டையில் பெத்தான்குளக்கரையில் அமைந்துள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மன்றத்தில் உலகம் சுபிட்சம் பெறவும், தைமாத 5 ம்வெள்ளி மற்றும் லட்சுமிபங்காரு பிறந்த நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.இதில் மன்ற நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.