பதிவு செய்த நாள்
15
பிப்
2021
10:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு, தேரை தூய்மைப்படுத்தும், பணிகள் நடைபெற உள்ளன.
காரமடை அரங்கநாதர் கோவில், மாசி மக தேர்த்திருவிழா, இம்மாதம், 20 ம் தேதி கிராம சாந்தியும், அதைத்தொடர்ந்து, 21ம் தேதி கொடியேற்றமும் நடைபெறுகிறது. 26 ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 27 ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு, தேருக்கு பாதுகாப்பாக போடப்பட்டிருந்த, தகரங்களை அகற்றி, தேரை சுத்தம் செய்யும் பணிகளில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்ட வருகின்றனர். அதைத்தொடர்ந்து தேருக்கு அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.