பதிவு செய்த நாள்
15
பிப்
2021
10:02
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்துவதற்கான பந்தக்கால் நட்டு பணிகளை மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்படவுள்ளது. இதற்காக அ.தி.மு.க..கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ., 4 ஏக்கர் நிலத்தை தனது சொந்த செலவில் வாங்கி திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
அதனை தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை வரும் 22ம் தேதி காலை 9 மணியளவில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கவுள்ளது. இந்த பூமி பூஜை விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பதி தேவஸ்தான போர்டு குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைக்கின்றனர்.
இதற்கான விழா ஏற்பாட்டுக்கான பந்தக்கால் அமைக்கும் பணிகளை மாவட்டச் செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., நேற்று பந்தகால் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகர செயலாளர்கள் துரை, பாபு, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், ஸ்ரீவிநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி, ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் ஞானவேல், மாணவரணி மாவட்ட துணை செயலாளர் பழனிமலை, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சம்பத்ஐயர், நீலாவதிபாண்டியன், மதியழகன், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர்கள் ராமசாமி, ஜீவானந்தம், வழக்கறிஞர்கள் அன்புச்செல்வன், திலீப், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வகுமார், அய்யூப்அலி, ஜெயச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் பூட்டோ, ஜகாங்கீர், வார்டு செயலாளர்கள் பூக்கடை முருகன், வெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற நகர துணை செயலாளர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஜெயபால், முக்கியஸ்தர்கள் செல்லையா, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.