Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் தேர் பராமரிப்பு ... நிவர் புயல்: ராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் குறித்த நூல் வெளியீடு நிவர் புயல்: ராமகிருஷ்ண மடத்தின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்ட பூமிபூஜைக்கான பந்தகால்
எழுத்தின் அளவு:
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்ட பூமிபூஜைக்கான பந்தகால்

பதிவு செய்த நாள்

15 பிப்
2021
10:02

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்துவதற்கான பந்தக்கால் நட்டு பணிகளை மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்படவுள்ளது. இதற்காக அ.தி.மு.க..கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ., 4 ஏக்கர் நிலத்தை தனது சொந்த செலவில் வாங்கி திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

அதனை தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை வரும் 22ம் தேதி காலை 9 மணியளவில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கவுள்ளது. இந்த பூமி பூஜை விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பதி தேவஸ்தான போர்டு குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைக்கின்றனர்.
இதற்கான விழா ஏற்பாட்டுக்கான பந்தக்கால் அமைக்கும் பணிகளை மாவட்டச் செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., நேற்று பந்தகால் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகர செயலாளர்கள் துரை, பாபு, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், ஸ்ரீவிநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி, ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் ஞானவேல், மாணவரணி மாவட்ட துணை செயலாளர் பழனிமலை, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சம்பத்ஐயர், நீலாவதிபாண்டியன், மதியழகன், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர்கள் ராமசாமி, ஜீவானந்தம், வழக்கறிஞர்கள் அன்புச்செல்வன், திலீப், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வகுமார், அய்யூப்அலி, ஜெயச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் பூட்டோ, ஜகாங்கீர், வார்டு செயலாளர்கள் பூக்கடை முருகன், வெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற நகர துணை செயலாளர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஜெயபால், முக்கியஸ்தர்கள் செல்லையா, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar