சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறந்து காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்பட்டது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும், கோவிலில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்படுவது வழக்கம்.தை கடைசி வெள்ளியில் பெருந் திருவிழா நடந்து முடிந்தது. தொடர்ந்து நேற்று 10 நிரந்தர ஊழியர்களும் 3 தற்காலிக உண்டியல் இளம் அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலரும் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்பட்டது.ரொக்கமாக ரூபாய் 77 லட்சத்து 68 ஆயிரத்து 223 , தங்கம் 195 கிராம், வெள்ளி 988 கிராம், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது . காணிக்கை பொருட்களை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், மற்றும் சாத்துார், துலுக்கப்பட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் பக்தர்கள் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கம் உறுப்பினர்கள் காணிக்கைப் பொருட்களை கணக்கிட்டனர் . விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், நகை சரிபார்ப்பு அலுவலர் சிவலிங்கம், கோவில் உதவி ஆணையர் கருணாகரன் , முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.