பதிவு செய்த நாள்
16
பிப்
2021
11:02
திருத்தண: திருத்தணி முருகன் கோவிலில், நாளை, விநாயகர் பூஜையுடன், மாசி மாத பிரம்மோற்சவம் துவங்கி, இம்மாதம், 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.பன்னிரன்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும், ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, நாளை, விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. 18ம் தேதி, காலை, 8:30- - 9:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 24ம் தேதி தேர் திருவிழாவும், 25ம் தேதி வள்ளி திருமணம் நடக்கிறது.இம்மாதம், 27ம் தேதி, கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.