பழநி : பழநி மலைக்கோவிலில், 11 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும், தங்க ரத புறப்பாடு துவங்கியது. கொரோனா பரவலால், 2020 மார்ச் , 20 முதல் திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தினந்தோறும் நடந்த தங்க ரத புறப்பாடும் நிறுத்தப்பட்டது. தமிழக அரசு வழிகாட்டுதல்படி, தற்போது பழநி மலைக்கோவிலில் பல்வேறு சேவைகள் துவங்கப்பட்டு வருகின்றன. மீண்டும் நேற்று இரவு, 7:15 மணிக்கு தங்க ரத புறப்பாடு துவங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் 2,000 ரூபாய் செலுத்தி பங்கேற்கலாம்.