கன்னிவாடி : கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில் பாலாலய விழா நடந்தது. இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பாலாலய விழா நேற்று நடந்தது. கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.மூலவர், உற்ஸவர், நந்திக்கு சிறப்பு அபிஷேக, மலர் அலங்காரம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. மவுனகுரு சுவாமி கோயில் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.